அன்று 11 வயதில் திருமணம் செய்த சிறுமி.. இன்று அவருடைய நிலை என்ன : நெஞ்சை உருக்கும் உண்மைச் சம்பவம்!

11 வயதில் திருமணம் செய்த சிறுமி கணவனை பறிகொடுத்ததால், தற்போது அவர் பாலியல் தொழிலாளியாக இருந்து வருகிறார்.நம் நாட்டில் பாலியல் என்பது ஒரு குற்றம் அனால் வங்கதேசத்தில் குழந்தை திருமணம் செய்வது மற்றும் பெண்கள் பாலியல் தொழில் செய்வது சட்டபூர்வமானவை. அப்படி வங்கதேசத்தின் Kandipara பகுதியில் பாலியல் தொழில் செய்து வரும் பெண் தான் Rupa.

19 வயதான இவர் தான் எப்படி பாலியல் தொழிலுக்கு வந்தேன் என்ற ஒரு உருக்கமான நிகழ்வை பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கூறியுள்ளார்.அதில், தனக்கு 11 வயதிலே திருமணம் முடிந்துவிட்டது. தன்னுடைய கணவருக்கு தன்னை மூன்று மடங்கு வயது அதிகம் இருக்கும், நான் கர்ப்பாமாக இருந்த நிலையில் என்னுடைய கணவர் இறந்துவிட்டார்.இதனால் தனிமைக்கு தள்ளப்பட்டார் Rupa.

கணவரை பறிகொடுத்த நிலையில் என்னையும், என் குழந்தையையும் யாரும் ஆதரிக்கவில்லை. உதவவும் முன்வரவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன்.

அதுமட்டுமின்றி என்னை யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. என்னுடைய 13 வயதில் நான் வலுக்கட்டாயமாக தலைநகர் டாக்காவிற்கு வேலைக்காக அழைத்துவரப்பட்டேன்.

ஆனால் என்னை அவர்கள் பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் விற்றுவிட்டனர். அதன் பின் அவர்கள் என்னை Kandipara-விற்கு அழைத்து வந்து மூன்று நாட்கள் ஒரு தனி அறையில் அடைத்துவிட்டனர்.உணவு மற்றும் தண்ணீர் குடுத்து அந்த இருட்டு வைத்துஇருந்தனர்.

என்னை கண்மூடித்தனமாக் அடித்தனர். நான் அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற போதும் என்னால் முடியவில்லை, அப்போது அவர்கள் என்னை வலுக்கட்டாயமாக Oradexon மாத்திரையை சாப்பிட வைத்தனர்.

ஏனெனில் அது சாப்பிட்டால் உடம்பு அதிகரிக்கும், பார்ப்பதற்கு பெரிய பெண் போன்று இருப்பேன். வங்கதேசத்தில் 18 வயதிற்கும் குறைவான பெண்கள் பாலியல் தொழில் செய்தால் குற்றம், அதற்காக அவர்கள் இப்படி செய்தார்கள்.என்னுடைய தோற்றத்தை மாற்றவே அந்த மாத்திரையை உட்கொள்ள வைத்தார்கள்.

அவர்களிடம் தப்பிக்க முயன்றும் என்னால் முடியவில்லை. அப்போது பாலியல் தொழில் செய்வதற்கு வங்கதேசத்தில் உரிமம் பெற வேண்டும்.

உரிமம் பெற்றால் மட்டும் தான் பாலியல் தொழில் செய்ய முடியும் என்பதால், அவர்கள் என்னை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று எனக்கு வயது 18 ஆகிவிட்டது, மகிழ்ச்சியாக இந்த தொழிலுக்கு வருகிறேன், இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று கூறி எனக்கு உரிமம் பெற்றுக் கொடுத்தனர்.

இப்படி தான் நான் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டேன். நாள் ஒன்றுக்கு நான் 10 முதல் 12 வாடிக்கையாளர்களை சந்திப்பேன். ஒரு முறைக்கு 200 taka வாங்குவேன்.என்னை தினந்தோறும் அடித்து துன்புறுத்திதான் இந்த தொழிலுக்குள் தள்ளினர். மிகவும் அவதிப்பட்டேன்.

என்னுடைய பிற்கால வாழ்க்கையாவது நன்றாக இருக்கும் என்று கனவில் இருக்கிறேன். ஆனால் என்னுடைய தற்போதை நிலையை பார்த்தலே தெரிகிறது. இருப்பினும் நம்பிக்கையில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

13 வயதில் பாலியல் தொழிலுக்கு வந்த ரூபாவிற்கு தற்போது 19 வயது என்பது குறிப்பிடத்தக்கது.வங்கதேசத்தில் 20 கிராமங்களில் பாலியல் தொழில்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 22 சதவீதம் 15 முதல் 19 வயதிற்கிடையே உள்ள சிறுமிகள் திருமணம் செய்து கொள்வதாகவும், 59 சதவீதம் 18 வயதுள்ள சிறுமிகள் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறப்படுகிறது.

மேலும் குழந்தைகள் அதிகம் திருமணம் செய்யும் நாடுகளில் Niger முதல் இடத்திலும், Central African Republic இரண்டாவது இடத்திலும் Chad மூன்றாவது இடத்திலும் வங்கதேசம் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த சோக கதை அனைவரின் மனதையும் உலுக்கியது.நம் நாட்டில் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது அனால் பொதுவெளியில் வந்தால் மட்டுமே மக்களுக்கு தெரியவரும்.