தன் சகோதரரிடம் டோனி அப்படி என்னதான் கூறினார்? தீபக் சஹாரின் சகோதரி அளித்த பதில்..!! வைரலாகும் புகைப்படம்

பஞ்சாப் அணியுடனான போட்டியின் போது பந்துவீச்சாளர் தீபக்கின் மீது கூல் கேப்டன் டோனி சற்றே கோபப்பட்டு என்னதான் பேசினார் என்பது தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் கேள்வியாக உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தில் முதல் 10 ஓவர்களுக்குள்ளே தீபக் சஹாரை அவரது 4 ஓவர்களையும் வீச வைத்துவிடுவார் டோனி. ஆனால் இந்த ஆட்டத்தில், பிராவோவின் காயம் காரணமாக 19-வது ஓவரை தீபக் சாஹர் வீசவேண்டிய நிலை ஏற்பட்டது. 12 பந்துகளில் 39 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில், ஸ்லோ பால் போட முயன்று, முதல் இரண்டு பந்துகளிலும் பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேல் ஃபுல்டாஸாக நோ பால் போட்டார்.

இதனால், கேப்டன் கூல் டோனி சற்றே பொறுமை இழந்து, தீபக் சஹாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதற்குபின், வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து டேவிட் மில்லர் விக்கெட்டையும் வீழ்த்தினார் சஹார். தீபக் சஹாரிடம் தோனி அப்படி என்ன சொன்னார் என்பதுதான் ரசிகர்கள் பலரின் கேள்வியாக இருந்துவருகிறது. இந்நிலையில்,

இந்தக் கேள்வியை ஒரு ரசிகர் தீபக் சாஹரின் சகோதரியான மால்தி சஹாரிடம் இன்ஸ்டாகிராமில் கேட்டுள்ளார். அதற்கு மால்தி, “அவர், அதை என்கிட்டையே சொல்ல மாட்டேங்குறாருபா, தெரிஞ்சிக்காம

என் தலையும் வெடிச்சிரும்போலதான் இருக்கு என பதிலளித்துள்ளார். சென்னை சூப்பர்கிங்ஸ் ஆடும் ஆட்டங்களைப் பார்க்க வரும் மால்தி, ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.