![angry boy on sis in mob](https://tamilanmedia.in/wp-content/uploads/2018/08/angry-boy-on-sis-in-mob.jpg)
தற்போது சமூக பிரச்சனைகளை விட உறவு சார்ந்த பிரச்சனைகள் தான் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இளசுகள் காதல் விவகாரங்களை பெரும்பாலூம் தற்போது கையில் எடுத்து ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் இந்த வயதான முதியவர்கள் கலாச்சாரம் என்ற பெயரில் செய்யும் செயல்கள் அதிர்ச்சியை சிலநேரம் ஏற்படுத்துகிறது அது மட்டுமல்லாமல் இந்த இளசுகள் காதல் என்ற பெயரில் அடிக்கும் கூத்துகள் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது அக்கா எந்நேரமும் போன் பேசிக் கொண்டே இருந்தமையால், அக்காவின் கழுத்தை தம்பி நெரித்துக் கொன்ற சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தானே மாவட்டத்தை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் தனது நண்பருடன் எந்நேரமும் அதாவது தூங்கும் நேரத்திலும் போன் பேசிக் கொண்டே இருந்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த பெண்ணின் உறங்கிக்கொண்டிருக்கும் போது அக்கா போனில் பேசிக்கொண்டிருந்ததை பார்த்து, ஆத்திரம் கொண்ட தம்பி உறக்கத்தில் இருந்து எழுந்து ஏன் எந்நேரமும் போன் பேசிக் கொண்டே இருக்கிறாய் என அவருடன் சண்டையிட்டுள்ளார்.
இதனையறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த பெண்ணின் உடலை மீட்டனர்.மேலும் கொலை செய்த அந்த பெண்ணின் தம்பியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் பல நாட்கள் இதே போன்று அக்கா பேசி தனது உறக்கத்தை கெடுத்ததாகவும் கூறிய அவர் ஆத்திரம் தாங்க முடியாமல் இந்த முறை இது கொலை வரை சென்ற்றுவிட்டதாக கூறியுள்ளார்.