நிக்கரகுவா மற்றும் கோஸ்டாரிக்கா எல்லைப்பகுதியில் நேற்றைய தினம் ராணுவ அதிகாரிகள் எல்லையை கடக்கும் பொதுமக்களிடம் சோதனை நடத்தினர். அச்சமயம் 19 வயதான
அலெஸ்கா என்ற இளம்பெண் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவர் மீது தீவிர சோதனை நடத்துகையில், ஆடையின் உள்பகுதியில் சுமார் 40ஆயிரத்துக்கும் மேலான டாலர்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவை அதிகாரபூர்வமாற்றது என்பதால், ராணுவ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அலெஸ்கா உடன் வந்திருந்த கிறிஸ்டியன்
என்பவரையும் பிடித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். ஆனால், இவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மறைமுகமாக எடுத்துச்சென்ற காரணங்களும் தெரியவில்லை.