
தமிழ் தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து இளைஞர்களில் கனவு கன்னியாக இருந்து வருபவர் நடிகை சமந்தா.நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையானார். அதே வேகத்தில் இவர் நாகர்ஜூனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்தகொண்டார்.
திருமணத்திற்கு பின்பு இவர் ஹீரோயினாகவே சினிமாவுக்கும் திரும்பிவிட்டார் சமீபத்தில் இவர்.விஷாலுடன் இரும்புத்திரை, விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ், சிவகார்த்திகேயனுடன் சீமராஜா என்று தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் இவர் நடித்து முடித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சினிமாவில் இருந்து கொஞ்சம் ஓய்வு எடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டுவிட்டர் பக்கத்தில் ஒரு ரசிகர் சமந்தாவுடன் திருமணம் செய்துகொண்டது போல் போட்டோ ஷாப் செய்து பதிவு செய்திருந்தார்.
அதைப்பார்த்த சமந்தா மிகவும் கூலாக, கடந்த வாரம் ஓடிப்போனேன், எப்படி இந்த புகைப்படம் வெளியானது தெரியவில்லை. முதல் பார்வையில் வந்த காதல் என பதில் கொடுத்திருக்கிறார்.அவர் வெளியிட்ட புகைப்படம் இதோ
Eloped last week .. don’t know how this leaked .. It was love at first sight https://t.co/wJxvLBXbCc
— Samantha Akkineni (@Samanthaprabhu2) July 29, 2018