காலையில் கல்யாணம்… நள்ளிரவில் அண்ணனோடு ஓட்டம் பிடித்த மணப்பெண்! அடைகொடுமையே..! இப்படி செஞ்சிட்டாங்களே

சேலம் மாவட்டத்தில் காலையில் திருமணத்தை வைத்துக்கொண்டு நள்ளிரவில் காதலனுடன் மணப்பெண் ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சின்னமசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த, ஞானசேகர் மகள் பிரியங்கா, 20. இவர் அப்பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி படித்து வருகிறார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த மனோஜ்குமார், 22 என்பவருக்கு காதல் மலர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் இவர்களுடைய காதல் விவகாரம் பிரியங்காவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

மனோஜ் குமார் சகோதர முறை என்பதால் பிரியங்காவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, முல்லைவாடியைச் சேர்ந்த, செல்லமுத்து மகன் பிரகாஷ், 24 என்பவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.அதன்படி நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது. அதற்கு முன்தினம் இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரிடம் பரிசுப்பொருட்களை வாங்கி சிறிது மகிழ்ச்சியாக இருந்த பிரியங்கா.

நள்ளிரவு 2 மணிக்கு மனோஜ்குமாருடன் ஓட்டம் பிடித்துள்ளார்.இதனை அறியாத உறவினர்கள் அனைவரும் அதிகாலை மணமகள் மயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின்னர் வேறுவழியின்றி அவசரமாக வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக பேசி திருமணத்தை நடத்தி வைத்தனர்.