நடு வீட்டில் சிறுநீர் கழிப்பார்! குழந்தை முன்பே வீடியோ காலில் கொஞ்சுவார்! மகாலட்சுமி-ஈஸ்வர் லீலைகள்! அம்பலமாக்கிய மனைவி!

தற்போது பிரபல சீரியல்களில் வில்லியாக வலம் வரும் நடிகைகளில் முதன்மையானவர் மகாலட்சுமி. கடந்த 8 வருடங்களாக பல்வேறு சீரியல்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். “அரசி” என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார். “தாமரை”, “வாணி ராணி”, “தேவதை கண்டேன்” ஆகிய சீரியல்களில் நடித்து மேலும் புகழ் பெற்றார். இந்நிலையில் 2016-ஆம் ஆண்டில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த திருமணமானது காதல் திருமணம். தற்போது சின்னத்திரையில் பரபரப்பான புகார் ஒன்று உலா வருகிறது.


அதாவது மகாலட்சுமிக்கும் தேவதையை கண்டேன் சீரியலின் ஹீரோவான ஈஸ்வருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக அவரின் மனைவியான சீரியல் நடிகை ஜெயஸ்ரீ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். “எங்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. எங்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தேவதையை கண்டேன் சீரியலில் நடிக்க தொடங்கியபோது என் கணவருக்கும், நடிகை மகாலட்சுமிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் செல்போன்களில் மிகவும் கொஞ்சி கொஞ்சி பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.மேலும் மகாலட்சுமியின் மகனை தன்னை அப்பா என்று அழைக்குமாறு ஈஸ்வர் கூறியது,

எங்கள் மகளை பெரிதும் பாதித்தது. இதனிடையே விவாகரத்து கேட்டு என்னை மோசமான முறையில் கொடுமைப்படுத்தினார்‌. என் வயிற்றிலே அவர் எட்டி உதைத்தது இன்றளவிலும் வலியை தருகிறது. இதுமட்டுமின்றி எங்களுக்கு திருமணமான பிறகுதான் அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததை அறிந்துகொண்டேன். அவர் லட்சக்கணக்கான பணத்தை சூதாட்டத்தில் இழந்து கடனாளியாக இருந்தனர். அப்போது நான் தான் அந்த பணத்தை திருப்பிக்கொடுத்தேன். தினமும் என்னிடம் வந்து மகாலட்சுமியுடன் வாழ விரும்புவதாக கூறி விவாகரத்து கேட்டு கொடுமைப்படுத்துகிறார்” என்று புகார் அளித்திருந்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், நடிகர் ஈஸ்வரை கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் நடிகை மகாலட்சுமியை தொடர்புகொள்ள முயற்சி செய்து வருவதாகவும், இருப்பினும் அவர் தலைமறைவாகி விட்டு யாருடனும் தொடர்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த புகாரானது சின்னத்திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.