![priya reddy govaliu](https://tamilanmedia.in/wp-content/uploads/2019/12/priya-reddy-govaliu.jpg)
தெலங்கானா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னர் 26 வயதான பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர், 4 லாரி ஓட்டுநர்களால் சீரழிக்கப்பட்ட சம்பவமானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று 4 குற்றவாளிகளும் எண்கவுண்டரில் என்கவுண்டர் செய்யப்பட்டதில் உயிரிழந்துள்ளனர் இந்த செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான சின்ன கேசவலு என்பவரின் மனைவி காவல் துறையினரிடம் ஒரு முறையீட்டை முன்வைத்துள்ளார். “எங்கள் இருவருக்கும் திருமணமாகி 1 வருடமே ஆகியுள்ளது. தற்போது நான் 7 மாதம் கர்ப்பமாக உள்ளேன். ‘
என் கணவரை சுட்டுக்கொன்ற அதே இடத்திலேயே என்னையும் என்கவுண்டர் செய்து விடுங்கள்” என்று அழுது புலம்பியுள்ளார். அவரது தாயார் சின்னகேசவலுவின் உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், தங்கள் விவசாய நிலத்தில் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.