பிரபல திரைப்பட நடிகையான ரேவதி தன்னுடைய வாழ்வில் நான் செய்த தவறு திருமணம் தான் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை ரேவதி. இவர் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போதே, இவர் திருமணம் செய்து கொண்டார். அதன் பின் பல சொந்த காரணங்களுகாக விவகாரத்து செய்த இவர், அதன் பின் மீண்டும் திரையுலகில் நடிக்க வந்தார். இந்நிலையில் ரேவதி தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் பனிரெண்டாம் வகுப்பு முடிச்சிருந்த நேரம்.
என்னை பற்றி தெரிந்து கொண்ட பாரதிராஜா, மண்வாசனை படத்தில் என்னை நடிக்கக் கேட்டார். அப்போது எனக்கு 16 வயது என்பதால், நான் நடிகையா? என்று மிரண்டு போய் அதெல்லாம் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் என் மாமா தான் சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார். எனக்கு நடிக்க வராது என்று பாரதிராஜாவிடம் நான் கூறிய போது, அப்போ நல்லாதாக போகிவிட்டது, உன்னை நடிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு, என்று திரையுலகில் நடிக்க வைத்தார்.
என் வாழ்க்கையில நான் எடுத்த தவறான சில முடிவுகளில் முக்கியமானது, என் திருமணம். அப்போது நான் கொஞ்சம் நிதானமாக முடிவு எடுத்திருந்தால், என் சினிமா பாதை வேறு மாதிரி மாறியிருக்கும். இன்னும்கூட நிறைய நல்ல படங்களில் நடித்திருப்பேன். தியேட்டர் நாடகங்களிலும் கொஞ்சம் காலம் நடித்தேன். இப்போ சில ஆண்டுகளாகத்தான் மீண்டும் நல்ல ரோல்கள் வர ஆரம்பித்துள்ளது, ஆக்டிவ்வா நடிக்கிறேன். காலம் நம்மை எப்படி எல்லாம் இயக்கும் என்று பார்ப்போம் என்று கூறியுள்ளார்.