
தமிழில் 2003 ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியானது பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் கணவரின் விருப்பத்திற்காக மீண்டும் நடித்துள்ளார். இதனால் தமிழ் ரசிகர்களும் இன்ப அதிர்ச்சியுள்ளனர். இவர் தமிழில் நடித்த சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்களில் இவரது சுட்டி தனமான நடிப்பிற்கு பல ரசிகர்கள் உருவாகின. தமிழ் படங்களை தவிர ஹிந்தி, தெலுங்கு,கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது முதல் ஹிந்தி படத்தில் நடித்த போதே இந்தி நடிகர் ரிதீஸ் தேஸ்முக் உடன் நெருக்கம் ஏற்பட்டது.
பின்னர் இவர்கள் இருவரரின் காதலும் 2012 ஆண்டு திருமணத்தில் முடிந்தது. பின்னர் இவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு ரியான் என்ற மகனும், 2016 ஆம் ஆண்டு ராய்ல் என்று மகனும் பிறந்தார்கள். குழந்தை பிறந்த பின்னர் தனது குடும்ப வாழ்க்கையில் மூழ்கி போன ஜெனிலியா அதன் பின்னர் சினிமாவில் தலை காட்டவில்லை. இந்நிலையில் நான்காண்டு இடைவேளைக்கு பின்னர் தனது கணவருக்காக மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் ஜெனிலியா.
தற்போது ஜெனிலியாவின் கணவர் ரிதீஸ் தேஸ்முக் ‘மௌலி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஒரே ஒரு பாடல் மட்டும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் நடிகை ஜெனிலியா
ஹோலி கொண்டாடுவது போல படு பயங்கரமாக குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த காட்சி தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் அதிக எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ