மீரா மிதுன் இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா போட்டியில் பட்டம் பெற்றவர். ஆனால் அவர் மீது பல்வேறு பண மோசடி புகார்கள் எழுந்ததால் பட்டத்தை திரும்ப பெற்றது. இந்த சர்ச்சையால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது இந்நிலையில் பிக்பாஸிலிருந்து நேற்று மீரா வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேற்றப்பட்டதற்கு முக்கிய காரணமே சேரனைப் பற்றி இவர் சொன்ன விதம் தான், அதன் காரணமாகவே ஒரே நாளில் ஷாக்சி தப்பி மீரா வெளியேற்றப்பட்டார். இதனால் வெளியேற்றப்பட்ட அவர்.

எந்த ஒரு ஊடகத்திற்கும் பேட்டி கொடுக்காமல் இருந்ததால், இவர் சீக்ரெட் ரூமில் அடைக்கப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் மீரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று கூறி, ஒரு ஹாட்டான புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் நீ செய்தது தவறு என்று அவருடைய கமெண்ட்டில் திட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர் தன்னுடைய ஸ்டோரியில் யாரோ ஒரு இளைஞனோடு இருப்பது போன்றும்,
அதற்கு மீரா ஒரு மாதிரி ரியாக்ஷன் கொடுப்பது போன்றும், உள்ளது. அதைக் கண்டதும் இணையவாசிகள் வெளியில் வந்தும் கூட சேரனிடம் மன்னிப்பு கேட்கவில்லை, அதற்கு இது வேறா என்றும் திட்டி வருகின்றனர்.