
மகத் நாம் அனைவரும் தெரிந்து இருக்கும் அளவுக்கு ஒரு பெரிய நடிகர் இல்லை.அவர் அஜித்தின் மங்காத்தா படம் மூலம் மக்களிடம் பெயர் பெற்றார்.சினிமா துறையில் அவரை மங்காத்தா மகத் என்று தான் அழைப்பார்களாம்.பிறகு அவர் சிம்புவிற்கு நெருங்கிய நண்பர்.அவர் சினிமா வாழ்க்கையில் முழுநேரம் சிம்புவுடன் பார்க்கலாம்.படவாய்ப்புகள் வராத நிலையில் அவர் மக்களிடம் என்ட்ரி குடுக்க வந்த ஒரு இடம் தான் பிக் பாஸ்.பிக் பாஸ் மூலம் அவர்களுடைய உண்மை முகம் வெளிவரும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
ஏனெனில் பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு தெரியும் மகத் மற்றும் யாஷிகா செய்யும் கூத்து.இது தமிழ் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் என்பது உறுதி.இதனை தொடர்ந்து யாஷிகாவின் அம்மா ஒரு இன்டெர்வியூ வில் கூறியதாவது யாஷிகா மீது குடும்பத்தினர் அனைவரும் கோவத்தில் உள்ளனர்.யாரும் யாசிக்காவிற்கு ஓட்டு போடாதீர்கள் என்றார்.அவர் பேசும் வீடியோ வைரல் ஆகியது.
பின்னர் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மஹத் யாஷிகாவை உண்மையாக காதலிப்பதாக கூறினார்.இதனை அடுத்து மஹாதின் காதலி”பிராச்சி மிஸ்ரா” தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுஉள்ளார்.அதில் அவர் “நான் முழுமையாக நொந்து போய் இருக்கிறேன்.
மஹத் வெளிப்படையாக யாஷிகா மீது உள்ள காதலை தெரிவித்துள்ளார்.இனிமேல் எனக்கும் மஹாத்க்கும் எந்த ஒரு தொடர்பும் இருக்காது.நான் இனி என் வாழ்க்கையை நோக்கி செல்கிறேன் யாரும் அவனை பற்றி என்னிடம் கேட்டு என்னை கஷ்டப்படுத்தாதீர்கள்.எனக்கு மெசஜ்ஸ் மற்றும் என்மீது அக்கறை கொண்ட அனைவர்க்கும் மிக்க நன்றி”என்று கூறி இருந்தார்.