
சரவணன்-மீனாட்சி என்ற சீரியலில் கிட்டத்தட்ட வில்லியாக நடித்தவர் காயத்ரி. இவர் இப்போது அதே தொலைக்காட்சியில் அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.சீரியல்களை தாண்டி ஒரு நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள இருந்தார். ஆனால் எதிர்ப்பாராத விதமாக அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. கை எலும்பு முறிந்துள்ளதாக தெறிவிக்கப்பட்டது.மோசமாக அடிபட்டிருக்கும் அவர் இப்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு காயத்ரியின் கணவர் யுவராஜ் தனது மனைவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை போட்டு அவர் தற்போது நலமாக இருப்பதாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.அந்த புகைப்படம் இதோ