
ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானியின் ஒரே மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமோலுக்கும் டிசம்பர் 22 ஆம் திகதி சுமார் 700 கோடி செலவில் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. உலக கவனம் பெற்ற இந்த திருமணம் குறித்து சில நேர்மறையான விமர்சனங்கள் மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. இஷா அம்பானிக்கு மாமனார் தரப்பில் இருந்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களா ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகு, இஷா அம்பானி தனது கணவருடன் பங்களாவில் குடிபெயர்ந்துள்ளார்.
முகேஷ் அம்பானி தனது ஒரே மருமகனுக்கு முன்கூட்டியே பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கியுள்ளார். மேலும், ஆனந்தின் தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். மிகவும் ஆடம்பரமான பரிசுப்பொருளை தனது மருமகனுக்கு கொடுக்காமல் மும்பையில் கடற்கரை ஒரமாக அவர்கள் ஓய்வெடுப்பதற்காக சிறிய வில்லா ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.