நடிகை வனிதா விஜயகுமார் உட்பட பலரை விமர்சித்து பேசி வந்த சூர்யா தேவிக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய முதல் மனைவியான எலிசபெத் ஹெலனை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டார் பீட்டர் பால். மேலும் ஹெலனுக்கு ஆதரவாக லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி உட்பட பல பிரபலங்களும் குரல் கொடுத்தனர் என்பது நமக்கு தெரியும்.

குறிப்பாக சூர்யா தேவி மிகவும் மோசமாக வனிதாவை விமர்சித்து வந்தார், இதனால் இவர் மீது வனிதா பொலிஸ் நிலையத்தில் புகாரளித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சூர்யா தேவியை விசாரணைக்காக பொலிசார் அழைத்து சென்றனர் என்பது நமக்கு தெரிந்த விஷயம். இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வனிதா டுவிட் செய்துள்ளார்.

மேலும், நான் கடவுளை மட்டுமே நம்புகிறேன், யார் என்ன செய்கிறார்கள் என்பதை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். சூர்யா தேவிக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது, அவர் விரைந்து குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளார் நடிகை வனிதா. அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவு இதோ,,,
God is watching he knows exactly who is doing what..I trust only him…wait n watch..by the way the accused SURIYA DEVI has tested corona positive at the court test…I pray for her speedy recovery.. https://t.co/bqDtQJgeeG
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 25, 2020