ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று யாரடி நீ மோகினி. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதாகும். இத்தொடரில் வில்லியாக நடிக்கும் இவரின் உண்மையான பெயர் சைத்ரா ரெட்டி. ஆந்திராவில் பிறந்த இவர் கன்னட சினிமாவில் பல படங்களில் கதாநாயகியகவும்,வில்லியாகவும் நடித்தார். பின்னர் பட வாய்ப்புகள் குறையவே கன்னட மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலாஜி போத்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்த இவர் 12 ஆண்டுகள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில், பின்பு கணவருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாகவும் பொலிசாரிடம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் தெலுங்கு சீரியல் துறையில் இருந்து தமிழ் சீரியலுக்குள் நுழைந்துள்ள சைத்ரா ரெட்டி தற்போது தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கும் ஒரு பரிட்சயமான ஆளாக இருந்து வருகிறார். ஒரு சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா, அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தியுள்ளார்.
