திருச்சி மாவட்டம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல். 44 வயதான குமரவேல் இன்டீரியர் டெக்கரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆஷா மெர்சி. இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் செல்வகணபதி என்ற காவல் உதவி ஆய்வாளர் வி பத் து ஏற்பட்டதில் ஆஷா மெர்சி வேலை பார்த்து வந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது தனது தந்தையைப் பார்ப்பதற்காக அவரது மகன் அபிஷேக் குமார் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வந்துள்ளார்.

அப்போது, அபிஷேக் குமாருக்கும் ஆஷா மெர்சிக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பேசி பழகிய நிலையில் நாளடைவில் இந்த நட்பு மீறிய உறவாக மாறியது. அபிஷேக் குமார் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரித்து வாழ்ந்து வருகிறார். ஆனால் அவரிடம் இருந்து விவாகரத்து பெறவில்லை. இந்நிலையில் அபிஷேக் குமாரும்,
ஆஷா மெர்சியும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இருவரின் உறவு குறித்து குமரவேலுக்கு எதுவும் தெரியாது. இந்நிலையில் கடந்த 2 -ஆம் தேதி மருத்துவமனைக்கு பணிக்குச் சென்ற ஆஷா மெர்ஷி வீட்டிற்குத் திரும்பவில்லை.

இதனால் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் ஆஷா மெர்சி அபிஷேக்குடன் வசித்து வந்துள்ளார், தாயை காணாமல் அவரது குழந்தைகள் ப ரிதவி ப்பில் உள்ளன. அம்மாவைப் பார்க்க வேண்டும் என குழந்தைகள் ஒரு பக்கம் கதறும் நிலையில், மனைவியை எப்படியாவது கூட்டிக் கொண்டு வர வேண்டும் என குமரவேல் தவித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், உங்களது மனைவிக்கு உங்களுடன் வர விருப்பம் இல்லை எனக் கூறுகிறார்கள், அபிஷக் உடன் தான் வாழ்வேன் எனக் கூறியுள்ளதாக போலீசார் கூறுகிறார்கள்,

குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டாவது ஆஷா திரும்பி வர வேண்டும் என குமரவேல் கண்ணீருடன் கூறியுள்ளார். இந்த போராட்டத்தில் மாட்டியிருப்பது அந்த பிஞ்சு குழந்தைகளும், அவர்களின் எதிர்காலமும் தான்.