தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அன்னையின் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது.

தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இதனிடையே எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது.

அவ்வகையில் அண்மையில் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை அவர் வெளியிட்ட நிலையில் தற்போது அவர் பாடியுள்ள ஒரு பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் இவ்வளவு அருமையாக பாடுகிறாரே இவருக்கு சினிமாவில் பாட வாய்ப்புக் கொடுக்கலாமே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
https://youtu.be/yCYhV94Ruh4