இவர் தமிழ் சினிமாவில் ‘சின்னகவுண்டர்’ திரைப்படத்தினை தொடர்ந்து ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘இளவரசன்’, ‘சிங்காரவேலன்’, ‘தேவர் மகன்’, ‘காத்திருக்க நேரமில்லை’, ‘கிழக்கு சீமையிலே’, ‘நிலக்குயில்’, ‘மகாராசன்’ என ஒரே வருடத்தில் பல படங்களில் நடிக்கத் தொடங்கிய நகைச்சுவை நடிகர் வடிவேலு. குறுகிய காலத்திற்குள் அந்த காலகட்டத்தில் மாபெரும் நகைச்சுவை அரசர்களாக விளங்கிக் கொண்டிருந்த கவுண்டமணி மற்றும் செந்தில் இணையுடன், மூன்றாவது நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.
தொடக்கத்தில் இவர் நடித்த, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம், காதலன்’, ‘ராசகுமாரன் போன்ற படங்களில் நடித்து இன்று வரை நிலைத்து நிற்கின்றார்.இவரின் உடல்மொழியை வைத்து எவ்வளவோ பேரை மகிழ்வித்து காட்டியுள்ளார் இவரின் ரசிகர்கள் இவர் பேரை எட்டாத தூரத்திற்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்,இவர் முகைபாவனை வைத்து மீம்ஸ் போடுவது கூட வழக்கம்
நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு கார்த்திகா என்ற மகளும் சுப்ரமணி என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் மகன் சுப்ரமணியின் புகைப்படம் தற்போது அவரது திருமண விழா புகைப்படம் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது இதனை கண்டவடிவேலுவின் ரசிகர்கள் லைக் செய்தும் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.


.