தமிழ் சினிமாவில், இயக்குனர் ஆவது எனபதே மிக பெரிய விஷயம் அதுவும் பிரம்மாண்டமாகவும் ஒரு படத்தினை இயக்குவது என்பது சாதாரண விஷயமே இல்லை. இப்போது குறும்படங்கள் மற்றும், சின்ன திரை என பல விஷயங்கள் இருப்பதால், இப்போது நிறைய பேர் சினிமாவுக்கு வந்துவிடுகிறார்கள் அதுவும் எளிதாகி விட்டது. ஆனால் அந்த காலத்தில் அப்படியெல்லாம் இல்லை ஒரு திரைபப்டத்தை இயக்க வேண்டுமென்றால்,

அதற்க்கு முன் முன்னணி இயக்குனருடன் உதவி இயக்குனராக இருந்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு உயர முடியும். அந்த காலங்களில் உதவி இயக்குனராய் இருப்பதும், ஒரு ஐந்து படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்க வேண்டும் என்பதும், நிறைய தயாரிப்பாளர்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதும் என பல சிக்கல்கள் இருந்து வந்தன.

இதையெல்லாம் தாண்டியும் அப்போதே சினிமாவில் ஒரு பெரிய இமயத்தை தொட்டவர் இயக்குனர் ஷங்கர். இவர் எஸ்.ஏ.சி. அவர்களுக்கு உதவி இயக்குனராக இருந்து பிறகு ஜென்டில்மேன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த முதல் திரைப்படமே, பெரிய வெற்றியினை பெற்றது, எனவே உடனே அடுத்தடுத்த படத்தின் வேலைகளை ஆரம்பித்தார். அடுத்து காதலன், இந்தியன், ஜீன்ஸ் என பல வித்யாசமான திரைப்படங்களை இயக்கி இருந்தார்.

இந்நிலையில் தற்போது அவரது மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் இதனால் இந்த லாக்டவுனிலும் மகளின் திருமண வேளைகளில் இயக்குனர் ஷங்கர் அவர்கள் பி.ஸியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுவுமில்லாமல் தமிழகத்தில் உள்ள பிரபல தொழிலதிபரின் மகன் தான் இயக்குனர் ஷங்கரின் மகளை திருமணம் செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதோ அவரது குடும்ப புகைப்படம்…
