கர்ணன் படத்தில் குதிரைக்கார பையனாக வந்தவர் என்ன செய்கிறார் தெரியுமா..? அவர் பற்றி வெளிவந்த தகவல்கள் இதோ..

இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் கர்ணன். வெளியாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் மக்களிடையே மிக பெரிய வரவேற்பினை பெற்றுள்ள படம், பல கருத்துகளையும் மக்களுக்கு தந்துள்ளது. மக்களிடையே மிக பெரிய எத்ரிபார்பில் வெளியாகிய இந்த படம் நல்ல வி.மர்சனங்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டுள்ளது.

நடிகர்கள் தனுஷ், ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். படம் வெளியாவதற்கு முன்பே மக்களிடயே இந்த படத்தின் பாடல்கள் மிக பெரிய வரவேற்பினை பெற்று விட்டதே படத்தின் மற்றுமொரு வெற்றிக்கு காரணம் ஆகும்.

இந்த படத்தில் பல ஸ்டார் நடிகர்கள் நடித்திருந்தாலும், சில காட்சிகளில் ஒரு சிறு பையன் அனைத்து ரசிகர்களின் கை தட்டல்களையும் பெற்று, அரங்கையே உற்சாகமாக்கினார். அவர் தான் அந்த சீன்களில் ஹீரோ என்பது போல அனைவரும் விசிலை பறக்க விட்டனர். அதிலும் இவர் குதிரை மீது சாவாரி செய்யும் காட்சிகளுக்கு கிளாப்ஸ் பறந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இப்போது இவர் இவ்வழு கட்சிதமாக எப்படி நடித்தார் என பார்கையில், ஏற்கனவே இவர் ஒரு சீரியல் நடிகராம், இவர் பெயர் காளி. மேலும், இவர் உண்மையிலேயே குதிரை ஓட்ட தெரிந்தவர். என்றும் அதனால் இவரை அந்த கதாபதிரத்துக்கு ஏற்று நடிக்க வைத்துள்ளதாக கூறியுள்ளனர்.