சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் தான் அஞ்சனா ரங்கன் அவர்கள். பிரபல தொலைக்காட்சியில் பல வருடங்களாக பணியாற்றி வந்தார் இவர். மேலும் இவருக்கென்று தனி பார்வையாளர்களே இருந்தனர். இவர் பிரபலத்தை பயன்படுத்தி பலரும் இவரை சினிமா வாய்ப்பிற்கு அழைத்தனர், ஆனால் அனைத்து வாய்ப்புகளையும் மறுத்துவிட்டாராம்.அதன்பிறகு Vjஅஞ்சனா “கயல்” படத்தின் நடிகர் சந்திரமௌலி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடந்தது. இருவருக்கும் தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தன் சின்னத்திரை பயணத்தை தொடங்கியுள்ள Vjஅஞ்சனா தற்போது பிரபல தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார் இவர். இந்நிலையில் தற்போது சேலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் மற்றும் சமூகவலைத்தளங்களில் உலா வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…
View this post on Instagram