பெரும்பாலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள். அதிலும் பிரபல டிவி ஒன்றில் வரும் சீரியல்கள் மட்டுமில்லாமல், அதில் நடித்து வரும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். அந்த வகையில், ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியலின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி அவர்கள்.

மேலும், இதே சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த ‘தினேஷ்’ என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் இவர் என்பது எங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், அதனைத் தொடர்ந்து, சரவணன் மீனாட்சி சீசன்- 2 & 3 இரண்டிலும் ஹீரோயினாக மிக பிரபலம் அடைந்தார்.

சிறப்பான நடிப்பால், தனக்கென்ற தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். மேலும், சீரியல்கள் மட்டுமின்றி யாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வந்தார். அடிக்கடி சோசியல் மீடியாக்களில் புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது சேலையில் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் நடிகை ரச்சிதா.
