தொழிநுட்பத்தை தோழனாய் கொண்டு ,இன்றியமையாததை இமைப்பொழுதில் ஈற்றெடுக்கும் இளைஞர்கள் …

தற்போது உள்ள காலத்தில் தொழில் நுட்பம் இல்லாத வாழ்க்கையை மனிதர் ஒருவரால் கூட வாழ முடியாது ,ஏனென்றால் நாம் அன்றாட வாழ்க்கையை வாழ எதோ ஒரு வகையில் தொழில் நுட்பமானது பயன்படுகிறது ,நாம் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை இவை பயன்படுகின்றன .,அதே போல் இளைஞர் ஒருவர் குளத்தில் இருந்து தனது நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல அவரது இரு சக்கர வாகனம் பயன்படுத்துகிறார் ,விஞ்ஞான வளச்சியில் நிறைய பேர் கொடி கட்டி பறக்கின்றனர் அவர்களுக்கு தம்மால் முடிந்த உதவியை செய்தலே போதும் ,ஆனால் அப்படி யாரும் செய்வதில்லை காரணம் நம்மிடம் இருக்கும் பொறாமை குணமும் ,போட்டியின் உச்சகட்டமும் இவற்றை செய்ய பிறந்த மனிதனின் சிலர் மனம் முன்வரவில்லை.