சினிமாவில் ஒரு பெரிய பிரபலமான கதாநாயகியாக வலம் வந்து கொண்டு இருந்த ஸ்ருதி ஹாசன். இப்போது தமிழ் படங்கள் பக்கம் ஏதும் நடிக்காமல் இருந்து வருகிறார். அதற்கு காரணமாக பலரும் அவர் இப்போது காதல் வயப்பட்டு இருக்கிறார். இப்போதைக்கு சினிமா பக்கம் வர வாய்ப்பு இல்லை என கூறி இருந்தார்கள். அதே போல கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டு காதலரை காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்.

அவர் போனதில் இருந்து அடுத்த ஒரு காதலரை தேடி பிடித்து இப்போது அவருடன் ஓர் சுற்றி வருகிறார். அந்த புகைப்படங்கள் அடிகடி வெளியாகி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து அடுத்ததாக வேறு ஒருவரை காதலித்து வருகிறார். இருவரும் ஒரே அறையில் தங்குவதும், வெளியில் சுற்றுவதும் என பொழுதை கழித்து வருகின்றனர். மேலும் இருவரும் மும்பையில் உள்ள ஸ்ருதிஹாசனின் பிளாட்டில் தான் குடியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இருக்கும் சூழ்நிலை காரணமாக இந்தியாவில் நடத்தப்படும் அனைத்து படபிடிப்புகளுக்குமே ஒரு பெரிய கட்டுபாடினை விதித்து இருக்கும் போது, பல சினிமா பிரபலங்கலுமே ரசிகர்களுடன் உரையாடி கொண்டும் சில வேலைகளை செய்து கொண்டும் பொழுதினை கழித்து வருகின்றனர். படப்பிடிப்புகள் இல்லாமல் ரசிகர்களுடன் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பொழுதை கழித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரடி தொடர்பு செய்யவும் வாய்ப்புள்ளதால் அதை பெரிதும் நடிகர் நடிகைகள் செய்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் ஸ்ருதிஹாசனும் அதைச் செய்தார்.

அந்த சமயத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி தான் இது. அந்த ரசிகர் “உங்கள் புதிய காதலருடன் இப்போது நீங்கள் திருமணம் செய்து முடித்து விட்டீர்களாமே என கேள்வியினை கேட்டு இருக்கிறார். இதற்கு ஸ்ருதிகாசன் பதில் என்னவாக இருக்கும் என அனைவரும் மூக்கை தீட்டி வைத்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இருவருக்கும் தற்போது வரை திருமணமாகவில்லை எனவும், இப்போதைக்கு காதலர்கள்தான் எனவும் குறிப்பிட்டு எதிர்பார்ப்பை ஏமாற்றினார். இப்போதைக்கு காதலர் என்றால் பிற்காலத்தில் இருவரும் பிரியக்கூட வாய்ப்பு இருக்கிறது என ஒருபக்கம் கிளப்பிவிட்டனர்.