ஒரே ரூமில் அந்த நடிகையுடன்…!!! பிரபல நடிகர் குறித்து உண்மையை உடைத்த தயாரிப்பாளர் !!

இந்நிலையில் நடிகர் ஜெய்க்கும் நடிகை அஞ்சலிக்கும் இடையில் காதல் இருப்பதாக அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. அதோடு குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்துவதாக ஜெய்யும் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் ஒரு நடிகராக ஜெய் விளங்குகிறார். இந்தநிலையில் தற்போது ஊடகம் ஒன்றிற்கு பலூன் பட தயாரிப்பாளர் போஸ்டர் நந்தகுமார் பேட்டியளித்தார். அப்போது அவர், படப்பிடிப்பின் போது,

அஞ்சலியை படத்தின் இயக்குநரான சினிஷ் ஸ்ரீதரன் பெயர் சொல்லி அழைத்துவிட்டார் என கடுப்பான ஜெய், எப்படி பெயர் சொல்லி அழைக்கலாம் என பெரும் பிரச்சனையாக்கிவிட்டாராம். அது மட்டுமல்லாமல் எந்த தகவலும் தெரிவிக்காமல் மறுநாள் ஷுட்டிங்கில் இருந்து அஞ்சலியை அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்று விட்டாராம். இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாம். மேலும் 5 ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவேன் என்று கூறிய ஜெய், தனக்கு புக்செய்யப்பட்ட ரூமில் தங்காமல் எப்போதும் அஞ்சலியுடன் அவரது ரூமில்தான்

தங்கியிருப்பார் என்றும் மற்றொரு ரூமை கேன்சல் செய்துவிடலாமா என்று கேட்டால் ஒத்துக்கொள்ளாமல் வெட்டி செலவு வைப்பார் என்றும் தெரிவித்துள்ளார். பலூன் படத்தின் போது நடிகர் ஜெய் தம்மை படாதபாடு படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அஞ்சலியும் ஜெய்யும் தங்களுக்குள் உள்ள காதலை மறுத்து வந்த நிலையில், இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்த தகவலை எடுத்து விட்டுள்ளார் தயாரிப்பாளர் போஸ்டர் நந்தகுமார்.