மீண்டும் ஒரு அபிராமி !! கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த கொடூரம்

சென்னையில் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்றது போல் கேரளாவில் இளம் பெண் ஒருவர் தனது கள்ளக காதலுக்கு இடைறாக இருந்த இரண்டரை வயது குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள வர்க்கலை பகுதியைச் சேர்ந்தவர் மனு என்பரும், உத்ராவும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு 2½ வயதில் ஏகலைவன் என்ற ஆண் குழந்தை இருந்தது

அங்கு குழந்தையின் நிலை கவலைக்கிடமானதால் வேறு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டது. இது குறித்து தகவல் அறிந்த கணவர் மனு, தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தினார்கள். மேலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் குழந்தை கொலைசெய்யப்பட்டது தெரிய வந்தது. இதனால் உத்ராவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை அவரும், கள்ளக்காதலனும் சேர்ந்து தரையில் வீசியும்.

சுவற்றில் அடித்தும் சித்ரவதை செய்தது தெரிய வந்தது. இதனால் ஏற்பட்ட காயத்தால் குழந்தை இறந்து போனது உறுதிசெய்யப்பட்டது. இதை தொடர்ந்து உத்ராவும், அவரது கள்ளக்காதலன் ரெஜிசும் கைது செய்யப்பட்டனர்.