அட…, இவருக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா..?? ‘தாமிரபரணி’ பட நடிகை இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க…

பல நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகி திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்களை கொண்டிருப்பார்கள். அவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சினிமா பக்கம் தலை காட்டாமல் எனது சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை பானு என்ற நடிகை முக்தா அவர்கள்.

.இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த “தாமிரபரணி” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை முக்தா. இந்த படத்தினை தொடர்ந்து அழகர் மலை, ரசிகர் மன்றம், சட்டப்படி குற்றம்,மூன்று பேர் மூன்று காதல், தேசிங்கு ராஜா உள்ளிட்ட இன்னும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் 2015ஆம் ஆண்டு ரிங்கு டோமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும், திருமணத்திற்கு பிறகு இவரை சினிமா பக்கம் காண முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நடிகை முக்தாவிற்கு ஃகியாரா ரங்கு டோமி என்ற ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையதளத்தில் வைரலாக வருகிறது.