வெள்ளித்திரை காட்டிலும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்று வருகிறது .விஜய் தொலைகாட்சியின் மூலம் பல தொகுப்பாளர்கல் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகின்றனர் .அந்த வகையில் ரேடியோ ஜாக்கி, தொகுப்பாளர், மற்றும் நடிகர் என பன்முகம் திறமை கொண்டவர் மாகாபா ஆனந்த்.

இவர் நிகழ்ச்சிகளை வித்தியாசமாகவும், காமெடியாகவும் அவர் தொகுத்து வழங்கி வரும் விதம் மக்களை கவர்ந்து சின்னிதிரையில் இவருக்கென்ன தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். எந்த தொலைக்காட்சியிலும் இல்லாத அளவிற்கு விஜய்யில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.ஒரு நிகழ்ச்சி முடிந்ததால் அடுத்து புதிய கான்செட்டில் உடனே மற்றொரு நிகழ்ச்சியை தொடங்கிவிடுவார்கள்.

அப்படி நிறைய நிகழ்ச்சிகள் மக்களிடம் ஹிட் அ டித்துள்ளன.
விஜய் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சி கொடுத்தாலும் அதை கலகலப்பாக ஹிட் செய்யும் அளவிற்கு கொண்டு செல்லும் திறமைவுள்ள ஒரு தொகுப்பாளர் மாகாபா. இவர் சூப்பர் சிங்கரில் செய்யும் அட்டகாசத்தை நாம் பார்த்திருக்கிறோம்.

மாகாபா ஆனந்த் முதன்முறையாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அதற்கு ரசிகர்கள் கியூட் என்றும், இதய ஸ்மைலி போட்டும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
