தொலைக்காட்சி சீரியல்களில் பெரும்பாலும் இல்லத்தரசிகள் வயதானவர்கள் மட்டும் பார்த்து வந்த நிலை மாறி தற்போது அனைத்து தரப்பு வயதினரையும் ஈர்த்து வருகிறது.அப்படி பிரபல தொலைக்காட்சி சேனலில் தென்றல் என்ற கணவன் மனைவி பாசத்தை சுட்டிக்காட்டி எடுக்கப்பட்ட சீரியலில் நடித்து பிரபலமானவர் சுருதி ராஜ்.
சுமார் 6 வருடங்களுக்கு மேலாக ஒளிப்பரப்பாகி சாதனை படைத்தது இந்த சீரியல். அதற்கு காரணம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தீபக்-சுருதி ராஜின் நடிப்பு தான்.ஆபிஸ் சீரியல் நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகை இதையடுத்து திருமதிசெல்வம், ஆபிஸ் போன்ற சீரியல்களில் நடித்து பிடித்தமான சீரியல் நடிகை என்ற பெயரையும் பெற்றார்.
தற்போது 41 வயதாகும் சுருதி ராஜ் திருமணமாகியு சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். இன்னும் இளமையுடன் இருக்கும் அவரது புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.