கடற்கரையில் நடந்து சென்ற பெண்ணுக்கு அடித்த கோடீஸ்வர அதிர்ஷ்டம்! என்ன கிடைத்திருக்கு பாருங்க

தாய்லாந்தின் Nakhon Si Thammarat மகாணத்தில் இருக்கும் கடற்கரைக்கு, கடந்த 23-ஆம் திகதி ஒரு கடுமையான மழைக்கு பிறகு Siriporn Niamrin(49) என்ற பெண் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு பெரிய வெள்ளை நிறத்தில், பொருள் கடலின் ஓரத்தில் மிதந்து கொண்டிருந்துள்ளது. இதைக் கண்ட அவர் அருகில் சென்று பார்த்த போது, அது ஒரு வாசனையாக இருந்துள்ளது. இதனால் அதை கடற்கரைக்கு இழுத்து வந்த அவர், தனது அண்டை வீட்டாரிடம் அது பற்றி உதவி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இது திமிங்கலத்தின் வாந்தி அதாவது, ஆங்கிலத்தில் Ambergris என்று கூறியுள்ளனர்.

 

சுமார் 12 அங்குல அகலம், 24 அங்குல நீளம் கொண்ட அந்த Ambergris 6.8 கிலோ இருந்துள்ளது, இது அப்படி உண்மையான திமிங்கலத்தின் வாந்தியாக இருந்தால், இதன் மதிப்பு, 186,500 பவுண்ட்(இலங்கை மதிப்பில் 3,59,83,998 கோடி ரூபாய்) ஆகும். Ambergris வாசனை திரவிய தொழிலில் பயன்படுத்தப்படும் ஒரு அரிய வகை பொருள், இது அது தானா என்பதை உறுதிபடுத்துவதற்காக, நிபுணர்கள் Siriporn Niamrin வீட்டிற்கு செல்லவுள்ளனர்.

இது குறித்து Siriporn Niamrin கூறுகையில், இவ்வளவு பெரிய துண்டைக் கண்டுபிடித்தது அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். அது எனக்கு பணம் தரும் என்று நம்புகிறேன். நான் அதை என் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன், அதைச் சரிபார்க்கவுள்ளேன் என்று கூறியுள்ளார். Ambergris-ஐ திமிங்கலத்தின் வாந்தி என்று கூறுவர். சில மீன்கள் சரியாக செமிக்காமல் திமிங்கலத்தின் குடல் பகுதிலேயே தங்கி விடும்.

இந்த எச்சத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு திமிங்கலம் வாந்தியாக வெளியே தள்ளும். இந்த பொருளை விஞ்ஞானிகள் Ambergris என அழைக்கின்றனர். வாசனை திரவியங்கள் தயாரிக்க இந்த பொருள் மிகவும் முக்கியமானதாக தேவைப்படுவதால், இதன் விலையும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.