13 வருடங்கள் கழித்து பிறந்த தன்னுடைய இரண்டாவது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நீலிமா..

பிரபல தமிழ் சீரியல்களில் பார்க்கும் அனைவருக்கும் பரிச்சயமானவர் என்று சொன்னால் அது நடிகை நீலிமா ராணி தான்.நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான “தேவர் மகன்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதை நிர்வகித்தும் வருகிறார்.தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, நீலிமா ராணிக்கும் அவரது கணவருக்கும் 12 வயது வித்தியாசமாம். மேலும், இரு வீட்டாரின் சம்மதத்துடன், அவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ள நிலையில், சமீபத்தில் , தனது கர் ப்ப கால புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார் ,

இந்நிலையில், இவருக்கு 13 ஆண்டுகளுக்கு பிறகு மற்றொரு குழந்தையை ஈற்றெடுத்துள்ளார் , அந்த குழந்தையின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது , அது மட்டும் இல்லாமல் இந்த குழந்தையை பார்த்த இவரின் ரசிகர்கள் அம்மாவின் ஜாடையில் இருகின்றது என்று கமெண்ட் பாக்ஸில் கூறி வருகின்றனர் .,