தாத்தா ஆனார் நடிகர் சீயான் விக்ரம்..! அவரின் மகளுக்கு என்ன குழந்தை பிறந்துள்ளது..? இன்ப அ திர் ச்சியில் உ றைந்த குடும்பத்தினர்…!

990 ஆம் ஆண்டு முதல் சேது (1999), விண்ணுக்கும் மண்ணுக்கும் (2001), சாமி (2003), பிதாமகன் (2003), ஐ (2015) போன்ற தமிழ் மொழி திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார் நடிகர் சீயான் விக்ரம். இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் 7 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011 ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அது சியான் விக்ரம். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா எனும் படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு துருவ் விக்ரம் மகன் மற்றும் அக்ஷிதா எனும் ஒரு மகள் இருக்கிறார்கள். சீயான் விக்ரமின் மகள் அக்ஷிதா கடந்த 2017 ஆம் ஆண்டு மனுரஞ்சித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. விக்ரம் மகள் அக்ஷிதா கர்ப்பமாக இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். இதனால் நடிகர் விக்ரம் தாத்தா ஆகியுள்ளார். மற்றும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.