தொகுப்பாளர் மாகாபா ஆனந்திற்கு 15வது திருமண நாள்..! – கேக் வெட்டி கொண்டாடிய பிரபலம்..

தற்போது உள்ள நிலையில் தொலைக்காட்சியில் வரும் தொகுப்பாளர்களுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் தொலைக்காட்சிகளில் பல தொகுப்பாளர்கள் உள்ளார்கள். நிகழ்ச்சிகள் நன்றாக செல்ல இவர்களும் மிக முக்கியமான காரணம் என்று சொல்லலாம். பெண் தொகுப்பாளினி நிறைய பேர் இருக்கிறார்கள். தங்களது திறமையை காட்டி வெற்றியடைந்துள்ளனர்.

இப்போது தொகுப்பாளர்களில் மக்களிடம் அதிக வரவேற்பு பெற்று வருபவர் மாகாபா ஆனந்த். இவர் நிகழ்ச்சி எப்போதுமே படு கலகலப்பாக இருக்கும்.

விஜய் டெலி அவார்ட்ஸில் சிறந்த தொகுப்பாளருக்கான விருது பெற்றார். சூப்பர் சிங்கர், முரட்டு சிங்கிள்ஸ் என நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அவர் விரைவில் Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை அர்ச்சனாவுடன் இணைந்து தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்த நிலையில் தொகுப்பாளர் மாகாபா தனது 15வது திருமண நாளை கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.