நடிகை த்ரிஷாவுக்கு வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான்!! ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை திரிஷா. இயக்குனர் அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அடுத்தடுத்து அஜித், விஜய், விக்ரம் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். அதன் பின்னர் லேசா லேசா, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு போன்ற பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளமே வைத்திருப்பவர் தான் நடிகை த்ரிஷா. தமிழில் இவர் கடைசியாக அஜித்தின் என்னை அறிந்தால், கமல்ஹாசனின் தூங்கா வனம், ஜெயம் ரவியின் பூலோகம், ரஜினியின் பேட்டை ஆகிய வெற்றி படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதையடுத்து, த்ரிஷா திரையுலகில் அறிமுகமாகி 21 ஆண்டுகள் ஆகப் போகிறது. அவர் திரையுலகத்திற்கு வர முக்கிய காரணமாக இருந்தது 1999-ம் ஆண்டு அவர் வென்ற ‘மிஸ் சென்னை’ பட்டம்தான். அந்த பட்டம் வென்ற நாளை நினைவு கூறும் வகையில் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள திரிஷா, “30-09-1999, என் வாழ்க்கையை மாற்றிய நாள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.