நடிகை யாஷிகா விபத்தில் சிக்கி படுத்தபடுக்கையில் இருக்கும் தற்போதைய நிலை என்ன? -அவரது புகைப்படம் வெளிவந்தது !!..

நடிகை யாஷிகா ஆனந்த்இவர் 1999 ஆம் ஆண்டு பிறந்தவர் இவர் பல தமிழ் திரை படங்களை நடித்தவர். அவர் நடித்த படங்கள் நோட்டா, கழுகு2, பலபடங்களைநடித்தவர் பின்பு விஜய்டி விதொலைக்காட்சில் பிக்பாஸ் நிகழ்ச்சிலும் கலந்துகொண்டார். இவர் மக்கள் இடம் நல்ல வரவேற்பு பெற்றவர். யாஷிகா ஆனந்த் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் திரையுலகில் 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

பின்னர் அதே ஆண்டு துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை யாஷிகாவின் விபத்து செய்தி ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது, அவருடன் பயணித்த அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். கால், முதுகெலும்பு என பல இடங்களில் யாஷிகாவிற்கு சர்ஜரி எல்லாம் நடந்தது, ஒரு 6 மாதங்களுக்கு அவர் எழுந்து நடக்க கூடாது என மருத்துவர்கள் கூறியதாக அவரே கூறியிருந்தார்.

தற்போது நடிகை யாஷிகா உடல்நலம் கொஞ்சம் சரியாக எழுந்து நடக்க முயற்சி செய்து வருகிறார். அவரது அந்த புகைப்படம் வெளியாக ரசிகர்கள் சீக்கிரம் குணமடையுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.