பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலம் நாயகியாக களமிறங்கியவர் சரண்யா. தனது ஆரம்பகாலத்தில் புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பவராக வாழ்க்கையை தொடங்கினர். அதன் பின்னர் ஜீ, ராஜ், கலைஞர் என பலவேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சரண்யா. அதன் பின்னர் தான் சீரியலில் நடிக்க தொடங்கினர்.
அந்த சீரியல் நல்ல ஹிட் கொடுக்கவே அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. பிறகு ரன் என்ற சீரியலில் நடித்து வந்த அவர் ஏதோ பிரச்சனை காரணமாக விலகினார். அடுத்து விஜய் டிவியில் வந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்து வந்தார், அந்த சீரியலும் திடீரென நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இவர் ஒரு புதிய விஷயம் செய்துள்ளார். என்னவென்றால் தனது தலைமுடியை கலரிங் செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் பில்லி எலிஸ் போல் உள்ளீர்கள் என கமெண்ட் செய்ய சிலர் இது உங்களுக்கு செட் ஆகவில்லை என்கின்றனர். இதோ அவரது புகைப்படம்…
View this post on Instagram