தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்றுவரை நிலைத்து நிற்கும் நபர்கள் ஒரு சில பேர் தான். அதில் மறக்க முடியாத நபராக உள்ளவர் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அவர்கள்.. எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் வாலி, குஷி, நியூ போன்ற சூப்பர் ஹிட் படங்களை எடுத்தவர். இவர் இயக்கத்தில் வெளியான வாலி படம் பற்றி நாம் அறிந்த விஷயம் தான்.. இவர் தற்போது ஹீரோவாகவும் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டார். தமிழ் சினிமாவில் இயக்குனராக பணியாற்றி நடிக்க வந்த ஒரு சில நபர்களில் ஐவரும் ஒருவர் தான்.

இவர் நடிப்பில் வந்த மான்ஸடர் படம் சூப்பர் ஹிட் ஆனது, இந்நிலையில் இதில் இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார். நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பெய் பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும். இவர் மீண்டும் பொம்மை படத்திலும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார், இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் தான் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகின.. இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியாவிடம் காதலை சொன்னதாக ஒரு தகவல் பரவியது.

அதோடு, அந்த காதலை ப்ரியா மறுத்ததாகவும் வதந்திகள் பரவ, எஸ்.ஜே.சூர்யா செம்ம கோபமாகிவிட்டார், தற்போது டுவிட்டரில் ‘இதை யாரோ கிளப்பி விட்டுள்ளனர், இவை முட்டாள் யாரோ செய்த வேலை, அவர் என்னுடைய தோழி மட்டுமே’ என்று கூறியுள்ளார். இந்த செய்தியானது ரசிகர்கள் மட்டும் அல்லாமல் மக்கள் அமத்தியுலும் தீயாய் பரவி வருகிறது.
Some idiot have spread the wrong news that I made a love Propossal to @priya_Bshankar and she rejected it …. she a very good friend of mine since “Monster” & sincere actress too that’s it …. pls don’t irritate and spread false baseless rumours … thx … sjs
— S J Suryah (@iam_SJSuryah) January 15, 2020