ரேஷன் அரிசியை வாங்கி தான் சமைக்கிறேன்..! – எனக்கு படிப்பும் குறைவு..! தன்னுடைய பரிதாப நிலை குறித்து பேசியுள்ள பிரபல தமிழ் சீரியல் நடிகர்..!

கொரோனா பிரச்சனையால் நடிப்பு வாய்ப்புகள் இல்லாமல் தான் படும் சிரமங்கள் குறித்து பிரபல சீரியல் நடிகர் சாய் சக்தி தற்போது பேசியுள்ளார். கொரோனா காரணமாக பல்வேறு துறைகள் இயங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இது சின்னத்திரை நடிகர், நடிகைகளையும் விட்டு வைக்கவில்லை என்று சொல்லலாம். பல நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு மற்றும் வாய்ப்புகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர் என்பது தான் உண்மை.

இது குறித்து பேட்டியளித்த பிரபல நடிகர் சாய் சக்தி, சீரியல் படப்பிடிப்பு தற்சமயம் தொடங்கினாலும், என்னை போன்ற சிறிய வேடத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. நான் மிகவும் குறைவாக படித்தவன், அதனால வேறு வேலைகள் எதுவும் தெரியாது. அப்படியே வேலை தெரிஞ்சாலும் சாதாரண மனுஷனா மாறி அந்த வேலையைச் செய்வேனானு தெரியலை.

அதனால் இப்போதைக்கு எனக்குத் தெரிந்த ஒரே தீர்வு செலவைக் குறைக்க வேண்டும். இதையடுத்தே கையில் கொஞ்சம் இருக்கும் பணத்தை எண்ணி எண்ணி செலவு செய்றேன். சாப்பாட்டுக்கு ரேஷன் கடையில் கொடுக்கப்படும் அரிசியை வாங்கிப் பொங்கச் சொல்லி பழகிவிட்டேன் என கூறியுள்ளார்.