ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவின் அம்மா,அப்பாவை பார்த்துள்ளீர்களா..? வெளியாகிய குடும்ப புகைப்படம் இதோ…

சன் டிவியில் பிரபலமாக ஓடி கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல். இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் ரோஜா என்கிற பிரியங்கா நல்கார்.

இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்துள்ளார். அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.அதன்பிறகு தெலுங்கு பட உலகில் தன் நடிப்பு பயணத்தை தொடங்கி உள்ளார்.

சீரியல்களில் இப்போது முதல் இடத்தில் இருப்பது ரோஜா. இந்த சீரியல் கடந்த சில மாதங்களாகவே TRPயில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

எனவே சீரியல் குழுவினர் கதைக்களத்தை மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் அமைத்து வருகின்றனர்.

இந்த சீரியல் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை பிரியங்கா. மிகவும் ஜம்பியான முகம், இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.