லாக் டவுண் நேரமான இப்போது மொத்த தேசமும் வீட்டுக்குள் தான் இருக்கிறது. பிரபலங்கள் தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அவ்வப்போது தங்களது ரசிகர்கள் கவனத்துக்கும் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை கீர்த்தி தன் அப்பாவின் வயலில் விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்.

பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகள்தான் கீர்த்தி பாண்டியன். தந்தையைப் போலவே சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எணம் கொண்ட கீர்த்தி, தும்பா படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அந்தப்படத்துக்கு மக்கள்மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைக்கவே, தொடர்ந்து நல்லகதையை தேர்வு செய்ய கதைகேட்டு வந்தார் கீர்த்தி. இந்நிலையில் லாக்டவுண் வந்துவிட தன் தந்தையின் வயலில் அதிரடியாக இ றங்கி விவசாயம் செய்துவருகிறார் நடிகை கீர்த்தி பாண்டியன். சில நாள்களுக்கு முன்பு டிராக்டர் ஒன்றில் உ ழுவதுபோல் வீடியோ ஒன்றை வெ ளியிட்டிருந்தார் கீர்த்தி. அது பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.

தற்போது வயலில் இறங்கி பெண்களுடன் நாற்றுநடும் புகைப்படத்தைப் வெ ளியிட்டிருக்கிறார் கீர்த்தி.நான் கரோனா ஊரடங்கை மீறவில்லை. என் தந்தையின் சொந்த வயலில்தான் விவசாயம் செய்தேன் என்று சொல்லி குறித்த அந்த புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார் நடிகை கீர்த்திபாண்டியன்.
One of the most grateful things I have ever done! Learning the craft, one step at a time ♥️
Had to pull in Driya baby for this one ???
? Appa @iarunpandianc (Again, this is within our quarantine gated home property, it is not a public area) pic.twitter.com/OxwNBXdz9J
— Keerthi Pandian (@ikeerthipandian) May 5, 2020