மும்பை பகுதியில் சற்று சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த வாரம் மாயமானார். இது குறித்து அவரது மனைவி தந்த புகாரில் தேடப்பட்டு வந்த நிலையில், தானே மாவட்டம் சகாப்பூா் பகுதியில் பாபு சடலமாக மீட்கப்பட்டார். பாபுவை என்ன செய்தார்கள் செய்தவர்கள் யார் என கண்டறிவதில் சிரமம் நிலவியது. இதையடுத்து பாபுவுடன் பழகியவர்கள் யார் யார் என போலீசார் பட்டியல் தயாரித்தனர். அதில் 18 வயது பெண்ணுடன் பழகுவதை கண்டுபிடித்தனர்.

இது பிடிக்காத அந்த பெண்ணின் தாய்தான் பாபுவை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. இதுகுறித்து அந்த தவறை செய்த்தது யார் என்று , பாபுவிற்கு திருமணம் ஆன நிலையில் தன்னுடைய மகளுடன் முறையற்ற வாழ்வு வாழ்ந்தான். எனவே என்னுடைய மகளை தொல்லை செய்யாதே என பல முறை கூறினேன். ஆனால் கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்து 4 பேருடன் சேர்ந்து போதையில் இருந்த பாபுவை ஆட்டோவில் கடத்தினேன்.

பின்னர் பாபுவை கழுத்தை நெரித்து இறக்கச்செய்தேன் செய்துவிட்டு, உடலை சகாப்பூர் பகுதியில் வீசி விட்டு தப்பி விட்டோம். பெண்ணின் தாய் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்ட போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய தொடர்புடைய தலைமறைவான மேலும் 4 பேரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.