சவுதி அரேபியாவில் 2019ம் ஆண்டு தற்போது வரை 6 குழந்தைகள் உட்பட சுமார் 134 பேர், தலை துண்டிக்கப்பட்டும் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.கொடூரமான முறைகளால் சித்திரவதை செய்யப்பட்டு, உயிரிழக்க செய்யப்பட்டனர் என மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. மரண தண்டனைகளை குறைப்பதாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உறுதியளித்த போதிலும், நாட்டில் மரணதண்டனைகள் அதிகரித்து வருகிறது. ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், சவுதியில் மேலும் 24 பேர் மரணதண்டனை நிறைவேற்றுவதற்கான ஆபத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதில் மூன்று குழந்தைகள், இளவரசரின் முக்கிய அரசியல் எதிரிகள், மதகுருமார்கள் மற்றும் மனித உரிமை பிரச்சாரகர்கள் அடங்குவர். 2019 ஆம் ஆண்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட 6 இளைஞர்கள், குழந்தையாக இருக்கும் போது செய்த குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மரண தண்டனைத் திட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட நிகழ்வில், சவுதி அரேபியாவில் நடந்த சட்டவிரோத மற்றும் தன்னிச்சையான மரணதண்டனைகள், கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 3 பெண்கள் உட்பட 51 பேர், போதை மருந்து தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. உலகின் பல நாடுகளில் இது சிறிய குற்றமாகவே கருதப்படுகிறது. சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றி கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 58 பேர் வெளிநாட்டினர் மற்றும் பெரும்பாலானவர்கள் ஷியா இஸ்லாத்தை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டனர். 21 பாகிஸ்தானியர்கள், 15 ஏமன்கள், சிரியாவிலிருந்து 5 பேர் மற்றும் எகிப்திலிருந்து 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 2 ஜோர்டானியர்கள், 2 நைஜீரியர்கள், ஒரு சோமாலியன் மற்றும் அடையாளம் தெரியாத நாடுகளைச் சேர்ந்த இருவர் ஆகியோரும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 22ம் திகதி குற்றம்சாட்டப்பட்ட 37 பேருக்கு ஒரே நேரத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இதில் 16 வயதுடைய Abdulkareem al-Hawaj, 17 வயதான Mujtaba al-Sweikat ஆகியோர் அடங்குவர். 2018 ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் பேசிய சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், பிராந்தியத்தில் ஒரு சில பகுதிகளில் மரண தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
எனவே நாங்கள் அந்த பகுதியில் புதிய சட்டங்களை உருவாக்க அரசாங்கம் மற்றும் சவுதி நாடாளுமன்றம் மூலம் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். மேலும், இது முடிவடைய ஒரு வருடத்திற்கு மேலாகும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், 100 சதவீதம் மாற்ற முடியாது, ஆனால் அதை பெரிய அளவில் குறைப்போம் என தெரிவித்திருந்தார்.
