திடீர் திருப்பம்… ஏமற்றத்தில் ஈழத்து பெண்! இரண்டாம் இடத்தில் யார் தெரியுமா? கடும் ஷாக்கில் இலங்கையர்கள்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்ற தகவல் வெளியான நிலையில் இரண்டாவது இடத்தை பிடித்த போட்டியாளர் குறித்தும் தகவல்கள் கசிந்துள்ளது. பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் என்ற தகவல் வெளியான நிலையில் இரண்டாம் இடத்தை சாண்டி பிடித்துள்ளதாக கூறப்படுகின்றது. சாண்டி டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்தது. ஆனால் முகென்தான் டைட்டிலை கைப்பற்றியுள்ளார். சாண்டிக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. இதேவேளை, ஈழத்து பெண்ணுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளதுடன், நான்காவது இடத்தை ஷெரினுக்கு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

முகேனுக்கு அடுத்த படியான வாக்குகள் நேற்று வரை லொஸ்லியாவுக்கே இருந்து வந்தது ஒருவேலை வெற்றியாளராக இலங்கை பெண் இருப்பார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தனர். ஆனால், இதிலும் ஈழத்தமிழர்களுக்கு ஏமாற்றமே. இதனால் இலங்கையர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். பிரபல தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் ஓடிக்கொண்டு இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இன்று நிறைவு பெற இருக்கிறது.

இறுதி போட்டியில் ஷெரின், முகென், சாண்டி, லாஸ்லியா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில், இறுதி நிகழ்ச்சியின் முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், இன்று மாலை ஆறு மணிக்கு

நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கவுள்ளதாக கமல் அறிவித்துள்ளார். நிகழ்ச்சின் வெற்றியாளர்கள் குறித்து பல்வேறு தகவல் வந்தாலும் நிகழ்ச்சியில் பார்த்த பின்னர்தான் ரசிகர்களுக்கு உறுதியான தகவல் கிடைக்கும்.