சென்னை கொத்தவால்சாவடி பகுதியில்தான் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள கோவிந்தப்பா நாயக்கர் தெருவில் வசிப்பவர் அருண்குமார். இவருக்குச் சொந்தமான பசு மாட்டை, அப்பகுதியில் உள்ள காலியிடம் ஒன்றில் வைத்து, புதன்கிழமை அதிகாலையில் இளைஞர் ஒருவர் தவறாக நடந்து கொண்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருண்குமார், அந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் அரியலூரை சேர்ந்த சுரேஷ் (32 வயது) என தெரியவந்தது. சுரேஷ், அதே பகுதியில் நடைபாதையில் வசித்து வந்தவர் ஆவார்.
எனவே இதுபற்றி அருண்குமார் போலீசில் புகார் செய்தார். இயற்கைக்கு விரோதமான செயல் எனக் கூறி, பிரிவு 377ன் கீழ் வழக்குப் பதிந்த போலீசார், சுரேஷை கைது செய்தனர்.
