தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்த நடிகைகள் கூட, திடீரென்று ஒரு நாள் விபச்சார வழக்கில் சிக்கி காணாமல் போயிருக்கிறார்கள். இந்த வழக்குகள் அவர்கள் மீது திடீரென பாய்ந்ததற்கு பெரிய பின்னணிகள் உண்டு. ஒன்று ஆளும் வர்க்கத்துக்கு அவர்கள் அடங்கி நடக்காமல் போயிருக்க வேண்டும். அல்லது போலீசார் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். வெளியில் தெரிந்து சில நடிகைகள்தான் இந்த மாதிரி வழக்கில் சிக்கியிருப்பார்கள். சில டாப் நடிகைகளை கையும் களவுமாகப் பிடித்தும், சில் அட்ஜஸ்ட்மென்ட்கள் காரணமாக கடைசிநேரத்தில் விட்டுவிட்ட தகவல்களும் வெளி வந்திருக்கின்றன. ஆனால் கடைசி வரையில் எந்த நடிகையும் தண்டனை பெற்றதாக மட்டும் செய்தியே வருவதில்லை… ஏன்?

மாதுரி
ரஜினி, விஜய்காந்த் என டாப் நடிகர்களுடன் நடித்தவர் மாதுரி. கடைசியில் இவர் ஒரு மாதிரி என பெயர் கெட ஆரம்பித்தது சினிமா உலகில். நடிப்புடன் சைடில் துணிக்கடை வைத்து நடத்தி வந்தவரை, ஒரு நாள் விபச்சார வழக்கில் கைது செய்தனர் போலீசார்.மாதுரி அந்த வழக்கிலிருந்து வெளியில் வந்தவர், சில மாதங்களிலேயே மீண்டும் ஒரு வழக்கில் சிக்கினார். சில ஆந்திரப் பெண்களை வைத்து தொழில் நடத்தியதாகவும் குற்றம்சாட்டினர் போலீசார்.

வினிதா
சரத்குமார், பிரபு, கார்த்திக் என தொன்னூறுகளில் முன்னணி நடிகர்களுடன் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் வினிதா. விபச்சாரத் தடுப்புப் போலீசார் விரித்த வலையில் சிக்கி, பலான தொழில் நடிகையாக முத்திரை குத்தப்பட்டவர்.

ப்ளோரா
விஜயகாந்த் ஜோடியாக கஜேந்திரா படத்தில் அறிமுகமாகி, குஸ்தி போன்ற படங்களில் நடித்தவர் ப்ளோரா என்கிற ஆஷா ஷைனி. இவர் சிக்கியது வழக்கில் அல்ல. அமெரிக்க பாஸ்போர்ட் மற்றும் விசா நடைமுறையையில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். இதனால் தமிழ் சினிமாவில் தடை செய்யப்பட்டு பின் மன்னிக்கப்பட்டார். ப்ளோரா இப்போதும் தெலுங்கு – தமிழ் படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவரது மாடலிங் படங்கள் என்ற பெயரில் முக்கால் மற்றும் முழு அலங்கோல படங்கள் இணையங்களில் உலா வந்து கொண்டுதான் உள்ளன.

புவனேஸ்வரி
இவரது கைதுதான் தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியது. இவரையும் பொறி வைத்துதான் பிடித்தனர் போலீசார். இவருடன் மேலும் இரு ‘அழகிகளும்’ கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் புவனேஸ்வரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தை பத்திரிகை வெளியிடப் போக, அது பெரும் பிரச்சினை ஆனது. சிறையிலிருந்து வெளியில் வந்த புவனேஸ்வரி, ஒரு கட்சியின் பொதுச் செயலாளராகக் கூட ஆனார். வழக்கு பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கிறது.

தேவிப்ரியா
பிரபல சீரியல் வில்லியான இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மகா மோசமானவை. நடிகை தேவிப்ரியா ஆனால் வழக்கு என்னானது என்று தெரியவில்லை… இவரோ இன்னும் பிஸியாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

பத்மா நாராயனன்
டி ராஜேந்தரின் வீராச்சாமி பட நடிகை. பரங்கிமலை அருகே உள்ள ஒரு ஓட்டலில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். இவரும் ஒரு ஆந்திர தொழிலதிபரும் இருந்த வீடியோக்களை வைத்து, பணம் பறிக்க முயன்றதாக குற்றச்சாட்டு.வழக்கு இன்னும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவரோ பெயரை மாற்றிக் கொண்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார். காஞ்சனா படத்தில் வரும் அந்த எம்எல்ஏ வைப்பு இவர்தான்!

ஸ்வேதா பாசு
நடிகை ஸ்வேதா பாசு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர். 2014-ம் ஆண்டு ஐதராபாத்தில் ஓர் ஹொட்டலில் பாலியல் தொழில் செய்ததற்காக கைது செய்யப்பட்ட ஸ்வேதா பாசு, இரண்டு மாதம் வீட்டு காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.