கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வெங்கடாச்சலம்- மீனாட்சி, இவர்களது மகன் அருண் பிரசாத், இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் இயக்குநர் ஷங்கரிடம் `ஐ’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தற்போது ஜி.வி பிரகாஷ் ஹீரோவாக நடிச்சிருந்த ‘4 ஜி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்நிலையில், இன்று காலை மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூருக்கு வந்து கொண்டிருந்த போது, ஜடையம்பாளையம் மார்க்கெட் பகுதியில் டிம்பர் லொறி மீது மோதியுள்ளது. இதில், அருண் பிரசாத் சம்பவ இடத்திலேயே ப ரிதா பமாக உ யிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிசார் லொறி ஓட்டுனரை கைது செய்துள்ளனர். ஷங்கர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “என்னுடைய முன்னாள் உதவியாளரும், இளம் இயக்குனருமான அருணின் திடீர் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் எப்போதும் இனிமையானவர், நேர்மறையானவர், கடின உழைப்பாளி. உங்களுக்காக எப்போதும் பிரார்த்தனை செய்வேன். உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
