மத்தியப்பிரதேசத்தில் உள்ள பெஞ்ச் என்னும் ஆற்றில் தண்ணீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு ஊரடங்கு அமலில் உள்ளதை பொருட்படுத்தாமல் இளம் பெண்கள் செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளனர். அவர்களுள் செல்பி எடுப்பதற்காக ஆற்றில் இறங்கிய 2 இளம்பெண்கள் நடுவில் இருந்த பாறை ஒன்றின் மீது ஏறி நின்று கொண்டனர். இதனிடையே அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சிறிது நேரத்தில் பாறை மூ ழ்கும் அளவுக்கு அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. இதனைக் கண்டு பயந்து போன மற்ற பெண்கள் உடனடியாக காவல்துறையினருக்கு அளித்த தகவலின்படி உடனடியாக அங்கு வந்த மீட்பு படையினர் கயிற்றைக் கட்டி ஆற்றில் இற ங்கி, அந்த இரண்டு பெண்களையும் தற்போது பத்திரமாக மீட்டுள்ளனர். அந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Two #MadhyaPradesh girls venture into the Pench river to take selfie, get trapped in swelling water pic.twitter.com/M3sJ2tjTwA
— Adarsh kumar Bejjenki (@AdarshSunny9) July 24, 2020