தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் பின்னணி பாடகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் வெங்கட் பிரபு. இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. அதில் முதல் மகன் தான் வெங்கட் பிரபு. அவரின் இளைய மகன் பிரேம்ஜி சினிமாவில் காமெடி நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவரின் மூத்த மகன் வெங்கட் பிரபு நடிகர், இயக்குனர்,பின்னணி பாடகர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.கங்கை அமரனின் மகன் என்று அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்த இவர் தற்போது தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் இயக்கிய மாநாடு மற்றும் மன்மத லீலை திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.

தற்போது இவர் தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றார்.இந்த திரைப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.இதனிடையே வெங்கட் பிரபுவிற்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளன. அதில் ஒரு மகளான ஷிவானி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
அவரின் புகைப்படத்தை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் உலகமே, உன் பிறந்தநாளில் உன்னை மிஸ் பண்றேன் என வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவரின் மகள் வெளிநாட்டில் இருக்கலாம் எனவும் அதற்காகவே வெங்கட் பிரபு இப்படி பதிவு போட்டிருக்கலாம் எனவும் பலரும் கமாண்ட் செய்து வருகிறார்கள்.