ஒடிசா மாநிலத்தில் மருத்துவமனையில் பிரசவ வார்டு பிரிவில் பணியாற்றும் செவிலியர்கள் பணி நேரத்தில் ‘டிக் டாக்’ வீடியோ செய்து சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதனால் மருத்துவமனை நிறுவனம் அவர்களுக்கு பணியிடை நீக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் மல்கான்கிரி என்ற பகுதியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. அதில் பச்சிளம் குழந்தைகள் வார்டில் பணியாற்றும் மூன்று செவிலியர்கள் குழந்தைகளுடன். ‘டிக் டாக்’ வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இளம் குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கும் இடத்தில் இந்த மாதிரியான ‘டிக் டாக்’ வீடியோ எடுப்பது குறித்து பலர் மருத்துவமனை மீது கண்டனம் தெரிவித்து வந்தனர்.இதையடுத்து பல்வேறு நபர்கள் அவர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என கமெண்டுகளையும்

பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அரசு மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார் அதன்படி மூன்று செவிலியர்களுக்கும்
நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்துள்ளது. இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்